காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிப்ரவரியில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பு

இஸ்லாமாபாத்,ஜன.8: பூடான் தலைநகர் திம்புவில் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டின் போது இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.  கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்குக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

இஸ்லாமாபாத்,ஜன.8: பூடான் தலைநகர் திம்புவில் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டின் போது இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.

 கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்குக்கு ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பசீரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் ஆக்கபூர்வமாக எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

 இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்களும் வரும் பிப்ரவரியில்தான் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்பை இரு நாடுகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.

 இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து இருவரும் விவாதித்து தீர்வு காண்பார்கள் என்று இரு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன.

 கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமத் குரேஷிக்கு இந்தியா வர அழைப்பு விடுத்தார்.

 இந்த அழைப்பை முதலில் ஏற்ற குரேஷி, பின்னர் இந்தியாவுக்கு வரும் திட்டமில்லை என்று அறிவித்தார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு இந்தியா உறுதி அளித்தால் மட்டுமே அந்நாட்டுக்கு செல்வது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 இந்நிலையில் திம்புவில் இரு நாட்டு வெளியுறவுச் செயலர்கள் சந்திப்பின்போது குரேஷிக்கு இந்தியா அழைப்புவிடுத்துள்ளது குறித்தும் ஆலோசிப்பார்கள் என்பது தெரியவந்துள்ளது.

 மும்பை தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சை தொடங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்தாலும், ஆசிய பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு தனது நிலைப்பாட்டை பெருந்தன்மையோடு மாற்றிக்கொண்டது.

 அமைதிப்பேச்சை தொடங்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றது. இதையடுத்து இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், செயலர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த ஆண்டு ஜூலையில் இஸ்லாமாபாதில் எஸ்.எம்.கிருஷ்ணாவும், குரேஷியும் சந்தித்துப் பேசினர். அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா ஒவ்வொரு விஷயத்தையும் தில்லிக்கு தொலைபேசி செய்து கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக குரேஷி புகார் தெரிவித்தார். இதனால் எஸ்.எம்.கிருஷ்ணா அதிருப்தி அடைந்தார்.

 இதையடுத்து அந்த பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. குரேஷியின் செயல்பாட்டால் இரு நாடுகளிடையேயான அமைதிப்பேச்சு மீண்டும் தடைபட்டது.

 இருப்பினும் காஷ்மீர் விவகாரம், நதிநீர்ப் பங்கீடு, சியாச்சின் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுதல் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் கூறிவருகிறது.

 இந்தியாவோ, மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டித்தல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை தகர்த்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துப் பேச விரும்புகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.