இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காத்மாண்டு-லக்னெü விமான சேவை தொடக்கம்

காத்மாண்டு, ஜன.8: நேபாளத்தைச் சேர்ந்த விமான நிறுவனம் காத்மாண்டு-லக்னெü இடையே விமான சேவையைத் தொடங்கியுள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இந்த விமானங்கள் இயக்கப்படும்.  நேபாளத்தின் புத்தா ஏர் எனும் நிறுவனம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

காத்மாண்டு, ஜன.8: நேபாளத்தைச் சேர்ந்த விமான நிறுவனம் காத்மாண்டு-லக்னெü இடையே விமான சேவையைத் தொடங்கியுள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இந்த விமானங்கள் இயக்கப்படும்.

 நேபாளத்தின் புத்தா ஏர் எனும் நிறுவனம் 47 பேர் பயணம் செய்யக்கூடிய ஏடிஆர்-42 ரக விமானங்களை இந்த பகுதியில் இயக்குகிறது. புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படும்.

 லக்னெüவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து விமான இணைப்பு இருப்பதால் நேபாளத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு வசதியாக இந்த விமானம் இருக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வீரேந்திர பகதூர் தெரிவித்தார்.

 ஏற்கெனவே புத்தா ஏர் நிறுவனம் காத்மாண்டுவிலிருந்து பூடானுக்கு விமானங்களை இயக்குகிறது. இந்நிறுவனம் தொடங்கியுள்ள இரண்டாவது சர்வதேச விமான சேவை இதுவாகும்.

 அறிமுக கட்டணமாக ரூ. 5,600 ஆக குறைந்த பிரிவினருக்கான கட்டணமும் ரூ. 10,400 ஆக உயர் பிரிவு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கொல்கத்தா, பாட்னா, வாராணசி ஆகிய நகரங்களிடையே விமானங்களை இயக்கவும் இந்நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. கொல்கத்தா இடையிலான விமான சேவை மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக வீரேந்திர பகதூர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.