கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிறுவயதில் குடியேறியவர்களுக்கான சலுகை: ரத்து செய்ய டிரம்ப் முடிவு

அமெரிக்காவில் சிறு வயதில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு, வளர்ந்த பின்னர் அந்த நாட்டில் பணி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை திரும்பப் பெற அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்

News image
Updated On :4 செப்டம்பர் 2017, 8:22 pm

DIN

அமெரிக்காவில் சிறு வயதில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு, வளர்ந்த பின்னர் அந்த நாட்டில் பணி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை திரும்பப் பெற அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒபாமா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டால், சுமார் 7,000 இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க குடியுரிமைச் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, "குழந்தை குடியேற்றவாசிகளுக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நடவடிக்கை' (டிஏசிஏ) என்ற சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள், பெரியவர்கள் ஆன பிறகு அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், டிஏசிஏ சட்டத்தை ரத்து செய்வது குறித்து அதிபர் டிரம்ப் விரைவில் பரிசீலிப்பார் என்று அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
எனினும், அந்தச் சட்டத்தை ரத்து செய்வது என டிரம்ப் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "பொலிட்டிகோ' ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தச் சட்டத்தை ரத்து செய்த பிறகு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், இந்த வார இறுதிக்குள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த டிஏசிஏ சட்ட வாபஸ் நடவடிக்கை அறிவிக்கப்பட்டால், அது அவர் சார்ந்துள்ள குடியரசுக் கட்சியிலிருந்தே எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.