கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாகிஸ்தானில் புறக்கணிக்கப்படும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள்

பாகிஸ்தானில் தஞ்சமைடந்த ரோஹிங்யா இஸ்லாமியர்கள் புறக்கணிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான் அரசோ... 

News image
Updated On :28 செப்டம்பர் 2017, 3:06 pm

Raghavendran

இன்று ஆசிய கண்டங்களில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது ரோஹிங்யா விவகாரம். பௌத்த ஆதிக்கம் நிறைந்த மியான்மர் தேசத்தில் பாரம்பரியமிக்க சிறுபான்மையினராக ரோஹிங்யா இன இஸ்லாமியர்கள் உள்ளனர்.

மியான்மர் தங்களின் பூர்வீக நாடு என்றாலும் அவர்களுக்கு அங்கு போதுமான தேவைகள் எதுவும் அந்நாட்டு அரசால் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும், தொடர் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகினர்.

சமீபத்தில் மியான்மர் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது ரோஹிங்யா இஸ்லாமியர்கள் கடும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் இருபிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் குடியேறி வருகின்றனர்.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் என்ற பெயரில் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் இந்தியா மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவதாக பாகிஸ்தான் விமர்சனம் செய்தது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள சுமார் 40,000 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தொடர்ந்து பறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானில் குடியேறி வசித்து வந்தாலும், வங்காள மொழி பேசுவதால் தங்கள் குடும்பத்தினரை பாகிஸ்தானியர்களாக ஏற்க மறுப்பதாக ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர். 

அகதிகள் முகாம்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வந்தாலும் எங்களை இஸ்லாமியர்களாக ஏற்க மறுக்கின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தான் குடிமகனாக ஏற்பதில்லை. நாங்கள் இன்னும் புறக்கணிக்கப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்று கராச்சியில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களில் ஒருவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.