காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெளிநாட்டில் சொத்து வாங்கிய விவகாரம்: பாக்., பிரதமர் இம்ரான் கானின் தங்கைக்கு ரூ.2940 கோடி அபராதம் 

வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானின் தங்கை அலீமா கானுமுக்கு ரூ.2940 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2018, 2:39 pm

DIN

இஸ்லாமாபாத்: வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானின் தங்கை அலீமா கானுமுக்கு ரூ.2940 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தானில் சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில்  சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக, அரசியல் ரீதியாகத் தொடர்புள்ள 44 நபர்கள் மேல் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 

அந்நாட்டு மத்திய வருவாய் ஆணையம் அளித்த புகாரின் காரணமாகத் தொடரப்பட்ட இந்த வழக்கினை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.  இந்த வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி, அலீமா சமர்ப்பித்த எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் யாவும் வெளிநாட்டில் செயல்படும் எனது குடும்பத் தொழில்கள் மூலம் கிடைத்த வருவாயினைக் கொண்டு கிழக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 2008-இல் வாங்கப்பட்டவை. அத்துடன் அவற்றை வாங்குவதற்குத் தேவையான தொகையில் 50% கடனாகப் பெறப்பட்டது. 

பின்பு 2017-இல் அவற்றை நான் விற்று விட்டேன். இதுதொடர்பாக மத்திய வருவாய் ஆணையதிற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விட்டது. 

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

ஆனால் மத்திய விசாரணை ஆணையம் சமர்ப்பித்திருந்த விரிவான விசாரணை அறிக்கை கருத்திலெடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானின் தங்கை அலீமா கானுமுக்கு ரூ.2940 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அவர் கவனத்தில் கொள்ளாத காரணத்தால்தான் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.