சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பசிபிக் பெருங்கடலில் திங்களன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டாங்கா தீவில் திங்களன்று  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2018, 9:49 am

டாங்கா: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டாங்கா தீவில் திங்களன்று  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் தீவில் உள்ள டாங்கோ பகுதியில் திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது. 

கடலில் இந்த நிலநடுக்கம் 100 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.  

ஆனால் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.