தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

10,500 ஆதரவாளர்கள் கைது: வங்கதேச எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி, 10,500 எதிர்க்கட்சி ஆதரவாளர்களை அந்த நாட்டு போலீஸார் கைது செய்துள்ளதாக அந்தக் கட்சிகள்

News image

பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆதரித்து நடைபெறும் பேரணியில் அவரது கட்சியினர்.

Updated On :26 டிசம்பர் 2018, 12:47 am IST


வங்கதேசத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி, 10,500 எதிர்க்கட்சி ஆதரவாளர்களை அந்த நாட்டு போலீஸார் கைது செய்துள்ளதாக அந்தக் கட்சிகள் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டின.
கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, எதிர்க்கட்சியினரின் மனதில் பயத்தை விதைக்கும் வகையில் இத்தகைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவை கூறின.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சினர் 7,021 பேரும், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த 3,500 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்த எண்ணிக்கையை காவல்துறை செய்தித் தொடர்பாளர் சொஹோல் ராணா உறுதிப்படுத்தவில்லை.
எனினும், சட்டத்தை மீறுபவர்கள் என்ற அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாகவும், தேவையில்லாமல் யாரும் கைது செய்யப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.