விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மெக்ஸிகோ தடுப்புச் சுவர்: 3.6 பில்லியன் டாலர் ஒதுக்கீடு

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் 3.6 பில்லியன் டாலர்களை செவ்வாய்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2019, 5:24 am

DIN

மெக்ஸிகோ எல்லையில் சர்ச்சைக்குரிய தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் 3.6 பில்லியன் டாலர்களை செவ்வாய்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளது.

மெக்ஸிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு 18 அடி உயரத்துக்கு தடுப்பு வேலி அமைக்கவும், சாலைகளை மேம்ப்படுத்தும் பணிகளில் அமெரிக்க மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக உள்ளார். இதனை திட்டமிட்டு நிறைவேற்றுமாறு ராணுவ பொறியாளர் பிரிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பாதுகாப்புக்கான பட்ஜெட்டிலிருந்து 100 கோடி டாலரை ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்திடம் சமர்ப்பித்துள்ள அறிவிக்கையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே எல்லைச் சுவர் எழுப்பவதற்கான நிதியைப் பெறும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவசர நிலை அறிவித்ததற்குப் பிறகு முதல் முறையாக இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.