2021 தொடக்கத்தில் ஐரோப்பாவில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகியுள்ளது. பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் ஐரோப்பாவின் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மத்தியில் மக்கள் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் அலட்சியம் செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...