ரஷியாவில் 52,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர்
ரஷியாவில் இதுவரை 52,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


ரஷியாவில் இதுவரை 52,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ரஷியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மருத்துவ ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு செலுத்தப்பட்டது.
மாஸ்கோவில் கரோனா தடுப்பூசி போட 40,000 பேர் பதிவு செய்துள்ளனர். 25,000 பேருக்கு ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. மாஸ்கோவில் டிசம்பர் 5-ம் தேதி தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...