சீனாவின் பெய்தோவ்-3 புவியிடங்காட்டி அமைப்பின் இறுதி செயற்கைக்கோள் ஏவு கட்டத்தில் நுழைந்து, வசதியான நேரத்தில் செலுத்தப்படவுள்ளது.
பிரதேச அமைப்பிலிருந்து உலக அமைப்பாக பெய்தோவ் மாறுவதற்கு இது உத்தரவாதம் அளிக்கும். சீனாவிலும், சுற்றுப்புறப் பிரதேசங்களிலும் பெய்தோவ் புவியிடங்காட்டி அமைப்பின் சேவை ஆற்றலை உயர்த்தவும் இது துணை நிற்கும்.
இந்தக் கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின், புவிநிலைச் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து சோதனைகளை மேற்கொள்ளும்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்