பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,946 பேருக்கு கரோனா; மேலும் 105 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,946 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,85,034 ஆக அதிகரித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,946 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,85,034 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,946 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,85,034 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 105 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 3,695 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 73,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து - 71,092, பஞ்சாப் - 68,308, கைபர்-பக்துன்க்வா- 22,633, இஸ்லாமாபாத் - 11,219, பலுசிஸ்தான்- 9,587, கில்கித்-பல்திஸ்தான்- 1,326 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 24,599 மாதிரிகள் உள்பட இதுவரை 11,26,761 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com