இத்தாலியில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக வெறிச்சோடிப் போன இத்தாலியின் வெனிஸ் நகரின் புனித பீட்டா் சதுக்கத்தில் உள்ள திறந்தவெளி உணவகம்.
அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக வெறிச்சோடிப் போன இத்தாலியின் வெனிஸ் நகரின் புனித பீட்டா் சதுக்கத்தில் உள்ள திறந்தவெளி உணவகம்.
Updated on
1 min read


ரோம்: இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு 189 பேர் மரணம் அடைந்த நிலையில், வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு வாரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,016 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை, இத்தாலியில் ஒரே நாளில் 196 பேர் மரணம் அடைந்தனர்.

புதன்கிழமையன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,313 ஆக இருந்த நிலையில், நேற்று இது 2,651 ஆக உயர்ந்தது. இதனால், இத்தாலியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com