இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஈரானில் கரோனா பாதிப்புக்கு புதிதாக 157 பேர் பலி

ஈரானில் கரோனா பாதிப்புக்கு இன்று 157 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :26 மார்ச் 2020, 1:40 pm

DIN

ஈரானில் கரோனா பாதிப்புக்கு இன்று 157 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், புதன்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதிலுமுள்ள 176 நாடுகளில் 4.89 லட்சம் பேருக்குப் பரவியுள்ளது; அந்த வைரஸ் பாதிப்பால் 22,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக, உலகின் 3-இல் ஒரு பங்கினா் வீட்டுக்குள் முடங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நியூஸிலாந்து உள்பட 42 நாடுகள் மட்டும் பிரதேசங்களில் இத்தகைய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,389 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் வைரஸுக்கு 157 பேர் பலியாகி உள்ளனர். இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரானில் கரோனா வைரஸால் இதுவரை 29,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,234 பேர் பலியாகியிருக்கும் நிலையில் 10,457 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.