ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சீனாவில் கரோனா தொற்று ஒன்றாகக் குறைந்தது

சீனாவில் கரோனா நோய்த் தொற்று ஒன்றாகக் குறைந்துள்ளதாகத் தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :2 மே 2020, 9:14 am

PTI

சீனாவில் கரோனா நோய்த் தொற்று ஒன்றாகக் குறைந்துள்ளதாகத் தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

கடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொடிய நோயான கரோனா தற்போது உலகம் முழுவதும் 210 பரவி மக்களை உலுக்கி வருகின்றது. 

கரோனாவுக்கு அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 82,875 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,633 பேர் பலியாகியுள்ள நிலையில், 77,685 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

கரோனாவுக்கு புதிதாக ஒருவர் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றுவரும் நிலையில், புதிதாக தொற்று எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹூபே மாகாணமும் அதன் தலைநகரான வூஹானிலும் கடந்த ஏப்ரல் 4 முதல் தொடர்ச்சியாக 28 நாட்களுக்கு எந்தவொரு கரோனா பாதிப்பும் பதிவாகவில்லை என்று உள்ளூர் சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

ஹூபேயின் தடுப்பு மற்றும் கரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காணமுடிகிறது என்று ஹூபே துணை ஆளுநர் யாங் யுன்யான் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.