விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அபு தாபியில் கரோனா பாதித்த இந்திய ஆசிரியர் பலி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் பணியாற்றி வந்த இந்திய ஆசிரியர் கரோனா பாதித்து மரணம் அடைந்தார்.

News image
Updated On :25 மே 2020, 11:54 am

PTI


துபை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் பணியாற்றி வந்த இந்திய ஆசிரியர் கரோனா பாதித்து மரணம் அடைந்தார்.

அனில் குமார் என்ற 50 வயது ஹிந்தி ஆசிரியர், அபு தாபியில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர் கரோனா பாதித்து ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனில் குமாருக்கு கரோனா இருப்பது மே 7-ம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், 24ம் தேதி உயிரிழந்தார். 

இவர் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அபு தாபியில் வசித்து வந்தார். அவரது மனைவியும் அதே பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அனில் குமார் மரணத்துக்கு அவர் பணியாற்றி வந்த பள்ளி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.