45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கடலின் ஆழத்தை அளவிடும் செயற்கைக்கோள்: விண்ணில் செலுத்தப்பட்டது

கடலின் ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிய நீண்ட காலமாக வடிவமைக்கப்பட்ட அமெரிக்க -ஐரோப்பிய செயற்கைக்கோள் கலிபோர்னியாவிலிருந்து சனிக்கிழமை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.

News image
வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்தில் ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டுடன் சென்டினல் -6 செயற்கைகோள்
Updated On :23 நவம்பர் 2020, 8:42 am

DIN

கடலின் ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக அமெரிக்காவும்  ஐரோப்பாவும் இணைந்து உருவாக்கிய செயற்கைக்கோள் கலிபோர்னியாவிலிருந்து பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.

பல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்டு வந்த இந்த செயற்கைக்கோள் தற்போதுதான் ஏவப்பட்டுள்ளது. 

இந்த செயற்கைக்கோளை எடுத்துச் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட், வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து சனிக்கிழமை காலை 9:17 மணிக்கு பசிபிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி செலுத்தப்பட்டது. இதில், பால்கனின் முதல் பகுதி மட்டும் மீண்டும் ஏவுதளத்திற்குத் திரும்பியது. 

விண்வெளி அடிப்படையிலான கடல்சார் புவியியலை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றிய நாசாவின் முன்னாள் அதிகாரியின் பெயர் சூட்டப்பட்ட  இந்த 'சென்டினல் -6 மைக்கேல் ப்ரெய்லிச் செயற்கைக்கோளில்' மிகவும் துல்லியமான ரேடார் அல்டிமீட்டர் உள்ளது.

இதன் மூலம் கடலின் ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். இதே வகையைச் சேர்ந்த மற்றொரு செயற்கைக்கோளான சென்டினல் - 6பி 2025 ஆம் ஆண்டில் ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

கடல் தண்ணீர் சூடாவதன் மூலமும் குளிர்வதன் மூலமும் கடலின் ஆழத்தில் மாற்றம் ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் அல்டிமீட்டர் தரவுகளைப் பயன்படுத்தி எல் நினோ (வெப்பநிலை) மற்றும் லா நினா (குளிர்நிலை) போன்ற வானிலையைப் பாதிக்கும் நிலைகளைக் கண்டறிகின்றனர். மேலும், கடல் ஆழத்தில் மாற்றம் ஏற்படுவதால் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் இந்த அளவீடுகள் மிகவும் அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

சென்டினல் - 6 செயற்கைக்கோள் மூலம் துல்லியமான கடல் ஆழத்தை அளவிடுவதுடன், செயற்கைக்கோளில் உள்ள பிற கருவிகள் வளிமண்டல வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பற்றிய தரவுகளை வழங்கும். இது உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்த உதவும்.

இந்தத் திட்டத்துக்காக ஐரோப்பாவும், அமெரிக்காவும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (8,140 கோடி ரூபாய்) பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.