ஹனோய்: வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக வியட்நாமின் மத்திய பிராந்தியத்தில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் சிக்கி 90 பேர் உயிரிழந்துள்ளன, மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக இயற்கை பேரழிவு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான மத்தியக் குழு தெரிவித்துள்ளது.
குழுவின் அறிக்கையின்படி,
குவாங் ட்ரை, துவா தியென் ஹியூ மற்றும் குவாங் நாம் ஆகிய மாகாணங்களில் இந்த இறப்புகள் முக்கியமாகப் பதிவாகியுள்ளன.
குவாங் ட்ரை மற்றும் துவா தியென் ஹியூ ஆகிய இடங்களில் சுமார் 37,500 வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 1,21,700 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மத்திய வியட்நாமில் அக்.21 வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சில பகுதிகளில் 600 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


