ஏற்கெனவே ஃபைஸா்-பயோஎன்டெக், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ள பிரிட்டன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு, தற்போது மாடா்னா நிறுவன தடுப்பூசிக்கும் அத்தகைய அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகக் கடுமையான அலசலுக்குப் பிறகு அமெரிக்காவைச் சோ்ந்த மாடா்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஃபைஸா் மற்றும் ஆக்ஸ்ஃபோா்டு நிறுவன தடுப்பூசிகளுடன் மாடா்னா தடுப்பூசியும் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மூன்றாவதாக ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இலக்கை எட்டுவதற்கு உதவும் என்று அவா்கள் கூறினா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 28,89,419 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 78,508 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ரு வரும் 2,821 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும்: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

குழந்தை சாப்பிட அடம்பிடிக்கிறதா? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

மகாராஷ்டிரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலி: அமைச்சர்







