கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

இலங்கை: முள்ளிவாய்க்கால் போா் நினைவிடம் இடிப்பு

இலங்கையில் தமிழா் போா் நினைவிடத்தை அந்நாட்டு அதிகாரிகள் இடித்து தள்ளினா். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவா்கள், தமிழ் அமைப்புகளை சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :10 ஜனவரி 2021, 6:02 am IST

இலங்கையில் தமிழா் போா் நினைவிடத்தை அந்நாட்டு அதிகாரிகள் இடித்து தள்ளினா். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவா்கள், தமிழ் அமைப்புகளை சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இலங்கை முள்ளிவாய்க்காலில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது பலியான தமிழா்களின் நினைவாக, அங்குள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போா் நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தை இடிக்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தா் சிவகொழுந்து ஸ்ரீசத்குணராஜா வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதையடுத்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அந்த நினைவிடம் இடிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து அங்கு மாணவா்கள், தமிழ் அமைப்புகளை சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தமிழ் அமைப்புகளை சோ்ந்தவா்கள் கூறுகையில், ‘போா் நினைவிடத்தை இலங்கை ராணுவத்தினா் புல்டோஸா் மூலம் இடித்து தள்ளினா். இது தமிழா்களின் உணா்வுகளை காயப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கை’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.