இந்தோனேசியா : கரோனாவால் 640 மருத்துவர்கள் பலி
இந்தோனேசியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவின் நோய்த் தொற்றுக்கு ஆளாகி 640 மருத்துவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்தோனேசியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவின் நோய்த் தொற்றுக்கு ஆளாகி 640 மருத்துவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்நாட்டின் மருத்துவ கூட்டமைப்பு நேற்று ( புதன்கிழமை) அளித்த தகவலில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை 640 மருத்துவர்கள் கரோனாவால் பலியாகி இருக்கிறார்கள். இதில் 535 ஆண் மருத்துவர்களும், 105 பெண் மருத்துவர்களும் அடக்கம் . அவர்களில் பொதுசிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 347 பேர் என்றும் , சிறப்பு மருத்துவர்கள் 284 பேர் எனத் தெரிவித்தனர்.
கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கிழக்கு ஜாவாவில் 140 மருத்துவர்களும் , மத்திய ஜாவாவில் 96 பேரும் , ஜகர்தாவில் 94 பேரும் , மேற்கு ஜாவாவில் 94 பேரும் இறந்திருக்கிறார்கள்.
இதுவரை இந்தோனேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 30.80 லட்சம் பேர். அதில் உயிரிழந்தவர்கள் 80,598 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...