தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாகிஸ்தானில் கரோனா பலி 24 ஆயிரத்தைக் கடந்தது!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் பலியானதை அடுத்து கரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :10 ஆகஸ்ட் 2021, 10:45 am

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் பலியானதை அடுத்து கரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 49,506 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் புதிதாக 3,884 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 10,75,504 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 84,427 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதிதாக 86 பேர் உள்பட மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,004 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று 2,669 பேர் உள்பட இதுவரை 9,67,073 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

பாகிஸ்தானில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 4,01,790 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 3,65,824 பேரும், கைபர் பதுன்க்வாவில் 1,49,056 பேரும், இஸ்லாமபாத்தில் 91,217 பேரும், பலூசிஸ்தானில் 31,234 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.