பிலிப்பின்ஸ் : 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பிலிப்பின்ஸ் நாட்டின் சமர் பகுதியில் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிலிப்பின்ஸ் : 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பிலிப்பின்ஸ் : 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பிலிப்பின்ஸ் நாட்டின் சமர் பகுதியில் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இராணுவத் தலைவர் ரமோன் சகலா தாக்குதல் குறித்து அளித்த தகவலில் , ' 'நியூ பீபுள்ஸ் ஆர்மி' அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை உறுதி செய்த ராணுவ ரகசியப் பிரிவின் தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதலில் ஈடுபட்டோம். அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை  தாக்க ஆரம்பித்தனர் . உடனே பதில் தாக்குதல் கொடுத்ததில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து 19 சக்திவாய்ந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது ' எனத் தெரிவித்தார்.

'நியூ பீபுள்ஸ் ஆர்மி' என்கிற அமைப்பு 1969 ஆம் ஆண்டு முதலே அரசிற்கு எதிராக போராடிவரும் அமைப்பாகும்.

தற்போது இந்த அமைப்பில்  3,000 பேர் இருப்பதும் , முக்கியமாக  கிராமங்களில் தாக்குதலை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com