சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

இலங்கை : 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கரோனா தாக்குதலின் பாதிப்புகளைக்  கட்டுப்படுத்த 12 வயதைத் தாண்டிய சிறார்களுக்கு  தடுப்பூசி வழங்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

News image
இலங்கை : 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

DIN

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கரோனா தாக்குதலின் பாதிப்புகளைக்  கட்டுப்படுத்த 12 வயதைத் தாண்டிய சிறார்களுக்கு  தடுப்பூசி வழங்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ராஜபக்சே ' இலங்கையில் கரோனாவை படிப்படியாக கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிட்டிருக்கிறோம். முதலில் 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்' எனத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 30 வயதைக் கடந்தவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் தவணை எடுத்துக்கொண்டவர்கள் 1.1 கோடி பேர் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 37 லட்சம் பேர் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,000 ஆகவும், பலி எண்ணிக்கை 6,096 ஆகவும் உள்ளது. இதன் காரணமாக அங்கு இரவு நேர ஊரடங்கு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.