அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆஸ்திரேலியாவில் கைமீறிச் சென்ற கரோனா நிலை

கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து மோசமான சூழலை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:31 am

DIN

கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து மோசமான சூழலை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து மோசமான சூழலை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு பதிவாகியிருந்த கரோனா பரவலை காட்டிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. டெல்டா வகை கரோனா ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து வரை பரவியுள்ளது.

நியூ செளத் வேல்ஸில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 681 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அம்மாநில பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. 

விக்டோரியாவில் நேற்று விட இரண்டு மடங்கு அதாவது புதிதாக 57 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து ஆறாவது முறையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா, ஆஸ்திரேலியா தலைநகர் பகுதி ஆகிய மூன்று இடங்களில் மொத்தமாக 754 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று தெரியவந்தது.

தீவிரமாக பரவக் கூடிய டெல்டா வகை கரோனாவை ஊரடங்கு மூலம் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இதுகுறித்து கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "டெல்டா வகை கரோனாவுடன் வாழ அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஊரடங்கை தளர்த்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரபடுத்த வேண்டியிருக்கிறது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.