ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தடுப்பூசி செலுத்திய ஆறு மாதத்திற்குள் செயல்திறன் குறைவு: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு மாதத்திற்குள் கரோனாவுக்கு எதிரான அதன் செயல்திறன் குறைகிறது என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஆகஸ்ட் 2021, 9:12 am

DIN

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு மாதத்திற்குள் கரோனாவுக்கு எதிரான அதன் செயல்திறன் குறைகிறது என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பைசர்/பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராஜெனேகா ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஆறே மாதத்தில் அதன் செயல்திறன் குறைய தொடங்குகிறது என பிரிட்டன் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்வது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஐந்து முதல் ஆறு மாதங்களில் கரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசியின் செயல்திறன் 88 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக குறைகிறது என பிரிட்டன் ZOE COVID ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பொறுத்தவரையில் செலுத்தப்பட்ட நான்கு முதல் ஐந்து மாதங்களில் அதன் செயல்திறன் 77 சதவிகிதத்திலிருந்து 67 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து  ZOE COVID ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டிம் ஸ்பெக்டர் கூறுகையில், "மோசமான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், வயதானவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் கிடைக்கும் பாதுகாப்பு குளிர்காலத்திற்குள் 50 சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.

எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை தேவைப்படுவது இதன் மூலம் தெரிகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து பரவல் அதிகரிப்பதை கண்டு அமைதியாக இருக்க முடியாது" என்றார்.

வயதானவர்களுக்கும் கரோனா ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்கும் செப்டம்பர் மாதத்திலிருந்து பூஸ்டர் டோஸ் வழங்குவது அவசியமாகிறது என தடுப்பூசி ஆலோசகர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.