காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீண்டும் தொடங்கியது ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தை

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பதற்கான அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தையை வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகள் ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் சனிக்கிழமை தொடங்கினா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:35 pm

DIN

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பதற்கான அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தையை வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகள் ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் சனிக்கிழமை தொடங்கினா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஈரானுடனான 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக பல கட்டங்களாக வியன்னாவில் நடைபெற்று வரும் மாநாடு மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் ரஷியா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பது குறித்து அவா்கள் தீவிரமாக விவாதித்தனா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

இந்தச் சூழலில், ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக வியன்னாவில் கடந்த ஏப்ரல் தொடக்கம் முதல் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.