ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தலிபான்களின் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. ஆப்கனின் 65% நிலப்பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் தற்போது காபூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இன்னும் 90 நாட்களில் ஆப்கானிஸ்தான் முற்றிலும் தலிபான்களிடம் சரணடையும் என அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தான் : பாதுகாப்புப் படை தாக்குதலில் 439 தலிபான்கள் பலி
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆப்கனின் குந்துஸ் விமானப்படை தளத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கிருந்த எம்.ஐ ரக போர் ஹெலிகாப்டரையும் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.
பெலாரஸ் - ஆப்கானிஸ்தான் ஒப்பந்தத்தின் படி 2019-ம் ஆண்டு 4 எம்ஐ-35 ரக ஹெலிகாப்டர்களைப் பரிசாக இந்தியா வழங்கியது. அதன் பராமரிப்புச் செலவுகளை ஆப்கன் அரசே மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது தலிபான்களிடம் சிக்கியிருக்கிறது.
நான்கு ஹெலிகாப்டரில் ஒன்று மட்டுமே தலிபான்கள் பிடியில் இருக்கிறது.