பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 26ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
பாகிஸ்தானில் சமீப தினங்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இங்கு புதிதாக 4,103 பேருக் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,67,791ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாசிட்டிவ் விகிதம் 6.63% ஆக உள்ளது. கரோனாவால் ஒரேநாளில் மேலும் 84 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 25,978ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 61,651 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே பாகிஸ்தானில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.