கௌதமாலா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 3,150 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,00,840-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 76 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12,544-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கௌதமாலாவில் 4,41,446 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 46,850 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.