சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

ஆப்கனில் பெண்களுக்கு கல்வி எப்போது? தலிபான்கள் பதில்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு கல்வி உரிமை விரைவில் வழங்கப்படும் என தலிபான்கள் விளக்கமளித்துள்ளனர்.

News image

ஆப்கனில் பெண்களுக்கு கல்வி எப்போது? தலிபான்கள் பதில்

Updated On :21 செப்டம்பர் 2021, 3:13 pm IST

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு கல்வி உரிமை விரைவில் வழங்கப்படும் என தலிபான்கள் விளக்கமளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்நாட்டில் தங்களின் மதச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக பெண்களுக்கு கல்வி மற்றும் வேலையில் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமஉரிமை கோரி அந்நாட்டு பெண்கள் காபூலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்தன. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விரைவில் பள்ளிக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்,    “இதுகுறித்து இறுதி செய்தி வருகிறோம். விரைவில் பெண்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய திறமையான நிர்வாகத்தை வழங்க உள்ளதாக முன்னர் தெரிவித்திருந்த தலிபான்கள் பெண் உரிமைகளில் தலையிட்டு வருவதாக விமரிசனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.