புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தாய்லாந்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாங்காக் மற்றும் மத்தியப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Updated On :30 செப்டம்பர் 2021, 12:27 pm

DIN

தாய்லாந்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாங்காக் மற்றும் மத்தியப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன. இதனால் நகர்களுக்கிடையேயான போக்குவரத்தும் மின்சார வசதியும் தடைபட்டுள்ளன.

தொடர் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 7 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில்  இதுவரை 1997795 குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

வடக்குப் பகுதியில் உள்ள சாவோ ப்ரயா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அணைகள் நிறைந்ததால் லோப்புரி, சரபுரி, அயுதயா, பதும்தனி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.