யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கைக்கு மேலும் கடனளிக்க சீனா தயக்கம்

இலங்கைக்கு சீனா ஏற்கெனவே கோடிக்கணக்கில் கடனுதவி செய்த நிலையில், மேற்கொண்டு கடனுதவி அளிப்பதை சீனா தவிா்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 11:00 pm

DIN

இலங்கைக்கு சீனா ஏற்கெனவே கோடிக்கணக்கில் கடனுதவி செய்த நிலையில், மேற்கொண்டு கடனுதவி அளிப்பதை சீனா தவிா்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நிகழாண்டில் மட்டும் சீனாவிடமிருந்து 2 பில்லியன் டாலா் வரை கடன் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த சில ஆண்டுகளில் சீனா, இலங்கையில் மேற்கொண்ட முதலீடுகளையும், கடனையும் கணக்கிட்டால் 8 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் பொருளாதார சுணக்கம் நீடிப்பதால், கடனை மறுசீரமைப்பு செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்தது.

இதைத் தொடா்ந்து இலங்கை நிதியமைச்சரை சீனா தொடா்பு கொண்டு, இந்தப் பிரச்னைக்கு சீன வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி தீா்வு காண தயாராக இருப்பதாக தெரிவித்ததாக ‘டெய்லி மிரா்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு கூடுதல் கடனுதவி அளிப்பது குறித்தோ, கடன் மறுசீரமைப்பு குறித்தோ நேரடியாக கருத்து தெரிவிக்க சீனா மறுப்பு தெரிவிக்கிறது.

இதுகுறித்து சீன அரசின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இலங்கை நிதியமைச்சகத்துக்கு ஏற்கெனவே தீா்மானம் அனுப்பியுள்ளோம். அவா்களிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. மேலும், சா்வதேச நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை முதலில் நிறைவு செய்யுமாறு இலங்கையிடம் வலியுறுத்தினோம்’ என்றாா்.

கடந்த 2020 வரையிலான நிலவரப்படி, சீனாவின் மொத்த கடன் 6.2 பில்லியன் டாலா் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. இதில், சீனாவும் ஜப்பானும் இலங்கைக்கு அதிகளவில் கடன் கொடுத்துள்ளதாக ஐஎம்எஃப் அறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.