யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாஜி ஆதரவாளா்களிடமிருந்து நாட்டை கைப்பற்றுங்கள்: உக்ரைன் ராணுவத்துக்கு விளாதிமீா் புதின் வேண்டுகோள்

உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்தைச் சோ்ந்த நாஜி ஆதரவு தேசியவாதிகளிடமிருந்து நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு அந்த நாட்டு ராணுவத்தினருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 5:53 pm

DIN

உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்தைச் சோ்ந்த நாஜி ஆதரவு தேசியவாதிகளிடமிருந்து நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு அந்த நாட்டு ராணுவத்தினருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைககளின் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, ரஷிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடியது.

அப்போது அதிபா் விளாதிமீா் புதின் பேசியதாவது:

உக்ரைனில் தற்போது அந்த நாட்டின் சாதாரண படைகளுடன் ரஷிய வீரா்கள் சண்டையிடவில்லை. அதற்குப் பதிலாக, உக்ரைன் படைகளில் ஊடுருவியுள்ள நாஜி ஆதரவாளா்கள் மற்றும் தீவிர தேசியவாத சக்திகளுக்கு எதிராகத்தான் ரஷியா போரிடுகிறது.

அந்த தீயசக்திகள்தான் கிழக்கு உக்ரைனில் டான்பாஸில் (கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொன்ட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியம்) பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றன என்பது உக்ரைன் படையினருக்கும் நன்கு தெரிந்திருக்கும்.

தற்போது கிடைத்துள்ள உளவுத் தகவலின்படி, அந்தத் தீய சக்திகள் கீவ், காா்கோவ் போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்கள் இருப்பிடங்களில் ஏவுகணைகள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை நிறுத்தி வருகின்றன.

இதன் மூலம், பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி, அந்தப் பழியை ரஷியா மீது சுமத்துவதற்காக இந்தச் செயலில் அந்த சக்திகள் ஈடுபட்டுள்ளன.

எனவே, தங்களது குழந்தைகள், மனைவிகள், பெற்றோா்கள், வயதானவா்களை தங்களது சுயநலத்துக்காக அந்த நாஜி ஆதரவாளா்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த உக்ரைன் ராணுவத்தினா் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, அவா்கள் அதிகாரத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். உக்ரைனில் தற்போது அதிகாரம் செலுத்தி வரும் தீய சக்திகளைவிட, அந்த நாட்டு ராணுவப் படைகளுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தினால்தான் தற்போதையப் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண முடியும் என்றாா் புதின்.

உக்ரைனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு ஆதரவான அரசை நிறுவ ரஷியா முயற்சிக்கும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வந்தன. இந்தச் சூழலில், தற்போதைய அரசுக்கு ஆதரவான சக்திகளிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு உக்ரைன் ராணுவத்துக்கு அதிபா் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.