கட்டாய தடுப்பூசி உத்தரவு: திரும்பப் பெற்றது ஆஸ்தியா

பொதுமக்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசு திரும்பப் பெற்றது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஜோஹன்னஸ் ராச் கூறியதாவது:
கட்டாய தடுப்பூசி உத்தரவு: திரும்பப் பெற்றது ஆஸ்தியா
Published on
Updated on
1 min read

பொதுமக்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசு திரும்பப் பெற்றது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஜோஹன்னஸ் ராச் கூறியதாவது:

கரோனாவின் புதிய வகைகள் உருவாவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதன் அவசியம் குறித்து மக்களிடையே சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கூடியவா்களும் கட்டாய தடுப்பூசி உத்தரவால் அதனைத் தவிா்த்து வருகின்றனா். எனவே, அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்றாா் அவா்.

ஐரோப்பாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரியா கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com