விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சீனாவில் வேகமெடுக்கும் கரோனா: புதிதாக 1,280 பேர் பாதிப்பு

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :26 மார்ச் 2022, 5:51 am

DIN

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் 48 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 60 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் பலியாகியுள்ளனர்.

புதிதாக தொற்று பரவியதில், ஜிலின் மாகாணத்தில் 1,122, ஷாங்காயில் 38, தியான்ஜினில் 35, ஹெபேயில் 19, மற்றும் லியோனிங்கில் 14 எனவும் பதிவாகியுள்ளது. மீதமுள்ள வழக்குகள் ஹீலாங்ஜியாங் மற்றும் கன்சு உள்பட 15 மாகாண அளவிலான பிராந்தியங்களில் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், 20 க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் நகரங்களில் பயணத் தடைகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. 

ஜிலின், ஹெபெய், குவாங்டாங், ஷாங்காய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது.

சீனாவில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கரோனா தொற்று உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.