ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை 

வடகொரியா சனிக்கிழமை 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :5 நவம்பர் 2022, 1:29 pm

DIN

வடகொரியா சனிக்கிழமை 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

வடகொரியா சமீபத்திய வருடங்களில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரே நாளில் 23 ஏவுகணைகளை அந்நாடு சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில் இந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாகவே சனிக்கிழமை மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

காலை 11.39 மணியளவில் குறுகிய தூரம் சென்று தாக்கும் வகையிலான 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. 

தென்கொரியா - அமெரிக்கா இணைந்து மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை எதிர்த்து வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.