பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் காரின் மீது இளைஞர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்துகொண்டு மோத வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டன் அரசி மறைந்த இரண்டாம் எலிசபெத் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு அவரின் மகனும், அரசருமான மூன்றாம் சார்லஸ் காரில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தார்.
இரு வழிநெடுகிலும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையையொட்டிய சாலைகளில் பொதுமக்கள் வழிநெடுகிலும் அரசி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்தனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சாலையின் குறுக்கே ஸ்கேட்டிங் செய்துகொண்டு வேகமாக வந்த இளைஞர், அரசர் மூன்றாம் சார்லஸ் வந்துகொண்டிருந்த காரின் மீது மோத வந்தார். எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். அரசரின் அணிவகுப்பு எந்தவித இடையூறுமின்றி சென்றது.
இதனை அஞ்சலி செலுத்த கூட்டத்தில் இருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். அந்த விடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.