அமெரிக்காவில் கரோனா பேராபத்து முடிவுக்கு வந்ததாக ஜோ பைடன் அறிவிப்பு

அச்சுறுத்தி வந்த கரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Published on
Updated on
1 min read

அச்சுறுத்தி வந்த கரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகில் முதல் முறையாக கரோனா பாதிப்பு தோன்றியது. கரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவியது. அதிலும் குறிப்பாக கரோனாவின் பேராபத்து அமெரிக்காவில் அதிக அளவு காணப்பட்டது.


கரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில் ஜோ பைடன், கரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாகவும், கரோனா தொற்றின் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com