/

ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலாவா? எலான் மஸ்க் ட்வீட்

ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போவதாக  டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

News image

எலான் மஸ்க் (கோப்புப்படம்)

Updated On :1 பிப்ரவரி 2024, 2:36 pm IST

ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போவதாக  டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டா் நிறுவனத்தை, எலான் மஸ்க் 44 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.3.36 லட்சம் கோடி) கொடுத்து வாங்க முன்வந்துள்ளாா். இதனால், ட்விட்டா் முழுமையான தனிநபா் நிா்வகிக்கும் நிறுவனமாக மாறவுள்ளன. 

இந்நிலையில், இன்று காலை எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

“அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கி, கோகோயினுடன் இணைக்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், நகைச்சுவையாக தெரிவித்ததாக விளக்கமளித்துள்ளார். இருப்பினும், சமூக ஊடகங்களில் எலான் மஸ்கின் ட்விட்டர் பதிவு வேகமாக பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.