தென்மேற்கு ஐரோப்பிய நாடான போா்ச்சுகலில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 52,549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,03,169-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 33 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 19,413-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். போா்ச்சுகல்லில் இதுவரை 16,27,279 போ் கரோனாவிலிருந்து குணடைந்துள்ளனா்.