மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனையில் ஈடுபட்டதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2022, 8:17 pm

DIN

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனையில் ஈடுபட்டதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக அந்தப் பயிற்சியை வட கொரியா கருதுகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க-தென்கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த வட கொரியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

அதன் தொடா்ச்சியாக, அடுத்தடுத்து 23 ஏவுகணைகளை வட கொரியா புதன்கிழமை ஏவி சோதித்தது. அதில் ஒரு ஏவுகணை, தென் கொரிய கடலோரப் பகுதியில் விழுந்தது.

இந்த சரமாரி ஏவுகணை வீச்சால் தென் கொரியாவில் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

மேலும், வட கொரிய ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக தென் கொரியாவும் குண்டுகளை வீசி சோதித்தது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலை காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.