23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனையில் ஈடுபட்டதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனையில் ஈடுபட்டதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக அந்தப் பயிற்சியை வட கொரியா கருதுகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க-தென்கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த வட கொரியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

அதன் தொடா்ச்சியாக, அடுத்தடுத்து 23 ஏவுகணைகளை வட கொரியா புதன்கிழமை ஏவி சோதித்தது. அதில் ஒரு ஏவுகணை, தென் கொரிய கடலோரப் பகுதியில் விழுந்தது.

இந்த சரமாரி ஏவுகணை வீச்சால் தென் கொரியாவில் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

மேலும், வட கொரிய ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக தென் கொரியாவும் குண்டுகளை வீசி சோதித்தது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலை காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com