திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

கூகுள் அலுவலக மாடியிலிருந்து குதித்து மென்பொறியாளர் தற்கொலை!

அமெரிக்காவில் கூகுள் அலுவலக மாடியிலிருந்து குதித்து மென்பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :6 மே 2023, 1:43 pm IST

அமெரிக்காவில் கூகுள் அலுவலக மாடியிலிருந்து குதித்து மென்பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

அழுத்தமின்றி பணிபுரிவதற்கு சகல வசதிகளும் செய்துகொடுக்கும் அலுவலகம், கூகுள் நிறுவனம் என்ற பிம்பம் நிலவி வரும் நிலையில், இந்த தற்கொலை செய்தி பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கூகுள் கிளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 31 வயதான மென்பொறியாளர் ஒருவர், கூகுள் அலுவலகத்தின் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். (தற்கொலை செய்துகொண்டவர் குறித்த எந்த தகவலையும் கூகுள் வெளியிடவில்லை)

உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த நியூயார்க் காவல் துறையினர் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்கொலை தொடர்பாக எந்தவொரு ஆவணமும் கிடைக்கவில்லை என காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த, ஜேக்கப் பிராட் என்ற 33 வயது மென்பொறியாளர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தின் மற்றொரு மென்பொறியாளரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.