ஹவாய் தீவில் மற்றுமொரு காட்டுத் தீ!

ஹவாய் தீவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீயை அணைக்க முயற்சிக்கும் ஹெலிகாப்டர்
காட்டுத்தீயை அணைக்க முயற்சிக்கும் ஹெலிகாப்டர்

ஹவாய் தீவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதர்களுக்கோ குடியிருப்பு பகுதிகளிலோ பாதிப்பு ஏற்படவில்லை. 

கடந்த மாதம்தான், இந்த மழைக்காடுகளில் 99 பேரைப் பலியாக்கிய காட்டுத்தீ விபத்து நிகழ்ந்தது. 

ஓஹூ பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு இருக்கலாம். இதுவரை காட்டுத்தீ ஏற்படாத மழைக்காடுகள் கூட தீக்கு இரையாவது அபாயமான சூழலாகக் கருதப்படுகிறது. 

பசுமை செறிந்துள்ள ஓஹூ தேசிய சரணாலயம், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரிகள் என அமெரிக்கா அறிவித்திருந்த 22 உயிரினங்களுக்கான புகலிடமாக உள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்ட உயிரினங்களும் தாவரினங்களும் இந்தப் பகுதியில் மட்டும் காணக் கூடியவை.

இப்போது ஏற்பட்ட காட்டுத் தீயினால் என்னென்ன சேதங்கள் ஏற்பட்டுள்ளன என இன்னும் அறிய இயலவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com