ஸ்டாக்ஹோம்: குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பில், நடப்பாண்டுக்கான நோபல் பரிசு, 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மௌங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS
â The Nobel Prize (@NobelPrize) October 4, 2023
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2023 #NobelPrize in Chemistry to Moungi G. Bawendi, Louis E. Brus and Alexei I. Ekimov âfor the discovery and synthesis of quantum dots.â pic.twitter.com/qJCXc72Dj8
இன்று குவாண்டம் புள்ளிகள் நானோ தொழில்நுட்பத்தின் டூல் பெட்டியின் முக்கிய பகுதியாக உள்ளன. வேதியியலில் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நானோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
குவாண்டம் புள்ளிகள் இப்போது க்யூஎல்இடி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கணினி திரைகள் மற்றும் தொலைக்காட்சித் திரைகளை ஒளிரச் செய்கின்றன. மேலும் உயிரி வேதியியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உயிரியல் திசுக்களை வரைபடமாக்க இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிக்க.. நீ என்னுடைய ஊழியராக இருந்தால்.. முதல் மனைவியிடம் எலான் மஸ்க் காட்டம்
குவாண்டம் புள்ளிகள் மனித குலத்திற்கு மிகப் பெரிய பயனைத் தருகின்றன. எதிர்காலத்தில் அவை நெகிழ்வான எலக்ட்ரானிக்ஸ், சிறிய சென்சார்கள், மெல்லிய சூரிய மின்கலங்கள் மற்றும் தகவல்தொடர்புக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள் - எனவே இந்த சிறிய துகள்களின் திறனை நாங்கள் ஆராயத் தொடங்கினோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நோபல் பரிசானது ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8.32 கோடி), சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமாகும். பரிசுத் தொகை மேற்கண்ட மூன்று விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க.. விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சிக்கல்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் (அக். 9) அறிவிக்கப்படவுள்ளன.
நோபல் பரிசை நிறுவிய ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பா் 10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஞ்ஞானிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









