இணையவழித் தாக்குதல்: ஈரான் பெட்ரோல் நிலையங்கள் முடக்கம்

இணையவழித் தாக்குதல் காரணமாக ஈரானிலுள்ள பெட்ரோல்-டீசல் நிரப்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதாக அந்த நாட்டு தொலைக்காட்சி திங்கள்கிழமை கூறியது.
இணையவழித் தாக்குதல்: ஈரான் பெட்ரோல் நிலையங்கள் முடக்கம்

இணையவழித் தாக்குதல் காரணமாக ஈரானிலுள்ள பெட்ரோல்-டீசல் நிரப்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதாக அந்த நாட்டு தொலைக்காட்சி திங்கள்கிழமை கூறியது.

இது குறித்து அந்தத் தொலைக்காட்சி கூறியதாவது:

நாட்டின் 70 சதவீத பெட்ரோல் நிலையங்களின் செயல்பாடுகள் திங்கள்கிழமை முடங்கின. மென்பொருள் கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டது.

இணையவழியில் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். எனவே, பொதுமக்கள் பீதியடைந்து பெட்ரோல் நிலையங்களில் குவியவேண்டாம் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த இணையவழித் தாக்குதலுக்கு ‘கொஞ்ஜெஸ்கே தராண்டே’ என்ற ஊடுருவல் குழு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே போன்று ஏற்கெனவே நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதல்களுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com