2024ஆம் ஆண்டில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
சூரியனை நீள்வட்டப் பாதையில் பூமி சுற்றி வருவதால், குறைந்த விட்டமுடைய வட்டப்பாதையில் பூமி பயணிக்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைந்து மிக அருகில் சூரியன் தென்படும். இதனை பெரிஹேலியன் தினம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெரிஹேலியன் நாள் என்பது வருடாந்திர சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் தருணத்தைக் குறிக்கிறது.
இந்த அரிய நிகழ்வு ஜன. 3ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது மற்ற நாள்களில் இருக்கும் தூரத்தைக் காட்டிலும் சூரியன் - பூமிக்கு இடையே 3 மில்லியன் மைல் தொலைவு குறைவாக இருக்கும்.
பூமி சூரியனை முழுவதும் சுற்றிமுடிக்க ஓராண்டு ஆகும். ஆனால், ஆண்டுதோறும் இதே நாளில் பெரிஹேலியன் நாள் வராது. அதாவது ஆண்டுதோறும் இதே நாளில் சூரியனுக்கு மிக அருகில் பூமி வராது. மாறாக ஓரிரு வார வித்தியாசங்களில் பெரிஹேலியன் நாள் நிகழக்கூடும் என அறியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



