பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிரேசில் வெள்ளம்: மாயமான 33 பேர், தொடரும் சீரமைப்புப் பணி!

பிரேசிலின் தெற்கு மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 33 பேர் மாயம்

News image
போர்டா அல்கிரே பகுதியில் வெள்ளம் (கோப்புப் படம்)- AFP
Updated On :2 ஜூலை 2024, 11:14 am

DIN

90 சதவிகிதம் அளவுக்கு பாதிப்படைந்த பிரேசிலின் தெற்கு மாநிலமான க்யூ கிராண்ட் டு சுல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 179 பேர் உயிரிழந்ததாகவும் குறைந்தது 33 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 29 இல் தொடங்கிய எதிர்பாராத பேரிடரால் 23.9 கோடி பேர் பாதிக்கப்பட்டதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பேரழிவின் உச்சமாக 4,50,000 இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தின் இடையில் வெள்ளநீர் வடிய தொடங்கியதால் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்துவருகின்றன. குறிப்பாக நகர வடிகால் அமைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. போர்டா அல்கிரே பகுதியில் கைபா ஆற்றுவெள்ளம் மீண்டும் தாக்கியது.

க்யூ கிராண்ட் டு சுல் சீரமைப்புக்காக பிரேசில் அரசாங்கம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கியுள்ளது.

ஆர்ஜெண்டினா மற்றும் உருகுவே எல்லையில் அமைந்துள்ள க்யூ கிராண்ட் டு சுலில் விவசாயம் மற்றும் மின்நிலையங்களை சார்ந்துள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட 89 ஆயிரம் மக்கள் மற்றும் 15 ஆயிரம் விலங்குகள் ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.