விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

கடந்தாண்டு மட்டும் உலக நாடுகள் அணு ஆயுதத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.7.6 லட்சம் கோடி வரை செலவு செய்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2024, 10:44 am

DIN

கடந்த 2023-ம் ஆண்டில் இந்தியா, சீனா, ஃப்ரான்ஸ், இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அணு ஆயுதத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7.6 லட்சம் கோடி வரை செலவிட்டதாக சர்வதேச அணு ஆயுத ஒழிப்புக் கமிட்டி (ஐசிஏஎன்) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு ரூ.1.4 கோடியும், ஒரு நொடிக்கு ரூ.2.4 லட்சமும் உலக நாடுகள் செலவிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத் தொகையில் அதிகபட்சமாக அமெரிக்கா ரூ.4 லட்சம் கோடி வரை அணு ஆயுதத்திற்கு செலவு செய்ததாகவும், இது மற்ற அனைத்து நாடுகளின் மொத்தத் தொகையை விட அதிகம் என்றும், கடந்தாண்டு மட்டும் அணு ஆயுதத்திற்கான செலவை அமெரிக்கா 80% அதிகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்ததாக சீனா ரூ.1 லட்சம் கோடி வரை ஒதுக்கியுள்ளதாகவும், அதற்கடுத்து ரஷ்யாவும், பிரிட்டனும் தோராயமாக ரூ.70 ஆயிரம் கோடி வரை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், இந்தியா ரூ.19 ஆயிரம் கோடி வரை அணு ஆயுதத்திற்கு செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் ரூ.7.5 ஆயிரம் கோடி வரை செலவிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், அணு ஆயுதத்திற்காக உலக நாடுகளால் ரூ.32 லட்சம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ஐசிஏஎன் தெரிவிக்கிறது. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் 9 நாடுகளும் நவீனமயமாக்கப்பட்டு வருவதால் அணு ஆயுதத்திற்கான செலவுகளையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.

அந்த அறிக்கையின் துணை ஆசிரியர்களான அலிசியா சாண்டர்ஸ் மற்றும் சாக்ரே கூறுகையில், “மனிதாபிமானமற்ற, உலகை அழிக்கும் அணு ஆயுத மேம்பாட்டுக்காக உலக நாடுகள் செலவளிக்கும் தொகையால் உலகின் பாதுகாப்பு மேம்படவில்லை, மாறாக அச்சுறுத்தலே அதிகமாகியுள்ளது” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.