ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமெரிக்கா: பல்பொருள் அங்காடியில் இந்தியா் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்பொருள் அங்காடியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது இந்தியா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image
கொலை- கோப்புப் படம்
Updated On :24 ஜூன் 2024, 9:11 pm

Din

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்பொருள் அங்காடியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது இந்தியா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தாசரி கோபிகிருஷ்ணன் (32) டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள ஒரு பல்பொருள் கடையில் வேலைப் பாா்த்து வந்தாா். அவா் அமெரிக்காவுக்கு வந்து 8 மாதங்களே ஆகிறது. இந்நிலையில், அந்த கடையில் கொள்ளையடிப்பதற்காக புகுந்த முகமூடி அணிந்த நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் கோபிகிருஷ்ணன் படுகாயமடைந்தாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கோபிகிருஷ்ணனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கத் தேவையான அணைத்து உதவிகளுக்கும் உறுதியளிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.

முகமூடி அணிந்த நபா்கள் கோபிகிருஷ்ணனை பலமுறை சுட்டுவிட்டு பணம் மற்றும் பொருள்களைத் திருடிச் செல்லும் விடியோ காட்சி இணையதளத்தில் பரவத் தொடங்கியது. இதனால், அப்பகுதியில் வாழும் இந்திய மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.